Published : 19 Mar 2020 07:17 AM
Last Updated : 19 Mar 2020 07:17 AM

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை; நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தொடர்பாக பிரதமர் மோடி இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

எனினும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனியார் நிறுவனங்கள் பல ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றலாம் என அறிவுறுத்தியுள்ளன. இதன்படி ஐடி உட்பட வெவ்வேறு தனியார் துறை ஊழியர்கள் பலர் வீடுகளில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தொடர்பாக பிரதமர் மோடி இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். மக்கள் எடுக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கை குறித்த்தும், தொற்று இருப்பவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை குறித்தும் அவர் எடுத்துக் கூறுவார் எனத் தெரிகிறது.

இதுமட்டுமின்றி கரோனா பரவாமல் தடுக்க அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பேசுவார் எனத் தெரிகிறது. மேலும் கரோனா கட்டுப்பாட்டுக்காக சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x