Last Updated : 18 Mar, 2020 03:35 PM

 

Published : 18 Mar 2020 03:35 PM
Last Updated : 18 Mar 2020 03:35 PM

அசாம் தடுப்புக் காவல் மையங்களில் 3 ஆண்டுகளில் இறந்தோர் எண்ணிக்கை 26: அமைச்சர் தகவல்

கடந்த 3 ஆண்டுகளில் அசாம் மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்ட தடுப்புக் காவல் மையங்களில் இறந்தோர் எண்ணிக்கை 26. இவர்கள் உடல் நலக்கோளாறு காரணமாக இறந்துள்ளதாகத் தெரிகிறது.

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டு சந்தேகத்துக்குரிய குடியுரிமை பெற்றவர்கள் அல்லது குடியுரிமை பெறாதவர்கள் தடுப்புக் காவல் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.

இந்நிலையில் மாநிலங்களவையில் இது குறித்த கேள்விகள் எழ பதிலளித்த மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய், “அசாம் மாநில அரசு அளித்த தகவல்களின் படி பிப்ரவரி 27, 2020-ன் படி தடுப்புக் காவல் மையங்களில் 799 பேர் உள்ளனர், இதில் 95 பேர் 3 மற்றும் அதற்கு கூடுதலான ஆண்டுகளாக முகாமில் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் 26 பேர் உடல்நிலை காரணமாக இறந்துள்ளனர்.

அதாவது 2017-ல் 6 பேர், 2018-ல் 9 பேர், 2019-ல் ஒருவர் உடல்நலக்கோளாறு காரணமாக இறந்தனர்” என்று பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x