

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 32 ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், இங்கிலாந்து, துருக்கி நாடுகளிலிருந்தும் பயணிகள் வருவதற்கு வரும் 18-ம் தேதி முதல் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஐரோப்பாவில் தடையில்லா வர்த்தகத்தில் ஈடுபடும் லீசடென்ஸ்டைன், ஐஸ்லாந்து, நார்வே, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் இருந்தும் பயணிகள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, கலாபுர்க்கியில் இருவர் இறந்துள்ளனர். இருப்பினும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்த 5,200 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 10 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு முக்கியக் கட்டுப்பாடுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:
இவ்வாறு லாவ் அகர்வால் தெரிவித்தார்.