Published : 16 Mar 2020 09:37 AM
Last Updated : 16 Mar 2020 09:37 AM

காஷ்மீருக்கு விரைவில் மீண்டும் மாநில அந்தஸ்து: உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்

காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டும் வகையிலும் பிரிவினைவாதிகளை ஒடுக்கவும் காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டு மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

இந்நிலையில், காஷ்மீரில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சியின் நிர்வாகிகள் நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினர். அப்போது அவர்களிடம் பேசிய அமித் ஷா, காஷ்மீருக்கு விரைவில் மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று உறுதியளித்தார். சூழ்நிலைகளில் ஏற்படும் முன்னேற்றத்தைப் பொறுத்து அரசியல் தலைவர்கள் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள் என்றும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் உறுதியளித்தார்.

இதனிடையே, காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் டயால்கம்பகுதியில் நேற்று தேடுதல் நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x