Published : 15 Mar 2020 08:56 AM
Last Updated : 15 Mar 2020 08:56 AM

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை 100-ஐக் கடந்தது

கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மத்திய சுகாதாரத்துறை தகவல்களின்படி மார்ச் 14ம் தேதி கணக்கின்படி 84 ஆக இருந்தது. ஆனால் மாநிலங்களிலிருந்து வரும் தகவல்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்ட கரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை 102.

சனிக்கிழமையன்று மகாராஷ்ட்ராவில் மேலும் 12 பேருக்கு கரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மகாராஷ்ட்ரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே சீனாவில் வெளிநாட்டிலிருந்து சீனாவுக்கு வந்தவர்கள் மூலம் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

ஹூபேய் மாகாணத்தின் வூஹானில் புதிய கரோனா தொற்று 4 பேருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் வூஹானில் கரோனாவுக்கு மேலும் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 3,199 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் இன்னும் 80,000 பேருக்கு தொற்று இருந்து வருகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x