Published : 13 Mar 2020 12:50 PM
Last Updated : 13 Mar 2020 12:50 PM

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார்; பாஜக பிடியில் 22 எம்எல்ஏக்கள்: கமல்நாத் குற்றச்சாட்டு

போபால்

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயார் என முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார். இந்நிலையில், அவர் கடந்த 10-ம் தேதி அக்கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து, அவரது ஆதரவாளர்களாக கருதப்படும் 6 மத்திய பிரதேச அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பதவி விலகல் கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் என்.பி.பிரஜாபதிக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தனர்.

பின்னர் அந்த கடிதங்களை பாஜகவினர் பேரவைத் தலைவரிடம் நேரில் ஒப்படைத்தனர். பதவி விலகியவர்களில் 19 பேர் பாஜகவினரின் கட்டுப்பாட்டில் பெங்களூருவில் தங்கி உள்ளனர். இதனால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் முதல்வர் கமல்நாத் மாநில ஆளுநர் லால்ஜி டான்னை இன்று நேரில் சந்தித்தார். அப்போது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயாராக இருப்பதாக கூறினார். அதேசமயம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேரை பாஜகவினர் கடத்திச் சென்று அடைத்து வைத்திருப்பதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x