Published : 13 Mar 2020 09:52 AM
Last Updated : 13 Mar 2020 09:52 AM

டெல்லி கலவரம்: தலைமை காவலர் கொலை வழக்கில் 7 பேர் கைது

டெல்லி கலவரத்தில் தலைமைக் காவலர் ஒருவர் கொலை செய் யப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வடகிழக்கு டெல்லியில் கடந்தமாதம் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர் களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படு காயமடைந்தனர்.

இந்தக் கலவரம் தொடர்பாக டெல்லி போலீஸார் 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கலவரத்தில் ஈடுபட்டதாகஇதுவரை 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 712 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில், இந்தக் கலவரத்தின்போது தலைமைக் காவலர்ரத்தன் லால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாதைச் சேர்ந்த 7 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என போலீஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, டெல்லி கலவரத்தில் தொடர்புடையதாக பாப்புலர்ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x