

பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் 100 வார்டுகளை கைப்பற்றி, பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு மாநகராட்சியை மீண்டும் பாஜக தக்க வைத்துக் கொண்டதால் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
198 வார்டுகளை கொண்ட பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம், அதிமுக, சுயேட் சைகள் என 1,120 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸுடன் நேரடியாக மோதியதால் மத்திய அமைச்சர்கள் அனந்தகுமார், வெங்கையா நாயுடு,சதானந்த கவுடா, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இதே போல காங்கிரஸின் சார் பாக முதல்வர் சித்தராமையா, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில தலைவர் பரமேஷ்வர் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர். கடந்த 22-ம் தேதி அமைதியான முறையில் வாக்குப்பதிவு முடிந்தது. கடந்த 2010-ம் ஆண்டை போலவே, இந்த தேர்தலிலும் இளைஞர்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டாத தால், 44 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. பெரும் எதிர்பார்ப் புக்கு இடையில், நேற்று காலை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு கள் அறிவிக்கப்பட்டது. தொடக்கம் முதலே காங்கிரஸ் 2-ம் இடத் துக்கு தள்ளப்பட்டு, பாஜக முன் னிலை வகித்தது. இதனால் பாஜக அலுவலகத்தின் முன்பாக குவிந்த பாஜக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு சில வார்டுகளை தவிர, அனைத்து வார்டுகளிலும் மிகவும் பின் தங்கி இருந்தது.
இறுதியாக பாஜக 100, காங்கிரஸ் 76, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 14, இதர கட்சிகள் 4 மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 4 வார்டுகளில் வெற்றி பெற்றனர். கர்நாடகாவில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸை வீழ்த்தி, பாஜக மீண்டும் பெங்களூரு மாநகராட்சியை கைப்பற்றி இருப்ப தால் அக்கட்சியின் தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மோடி பெருமிதம்
இது தொடர்பாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேசும்போது, ‘‘பாஜக தனி பெரும்பான்மை வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றி யுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. களத்தில் அயராது உழைத்த பாஜக தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியின் மீது உள்ள கோபத்தின் காரணமாகவே மக்கள் இந்த முடிவை அளித்திருக்கிறார்கள்'' என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பாக கூறுகையில்,'' மத்திய பிரதேசம், ராஜஸ்தான் வெற்றியை தொடர்ந்து, பெங்களூரு மாநக ராட்சி தேர்தலிலும் வெற்றிப் பெற்று பாஜக ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தி யுள்ளது. வளர்ச்சியையும், நல்ல நிர்வாகத்தையும் மேற்கொள்ளும் சிறந்த அரசியலுக்குக் கிடைத்த வெற்றி இது''என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித் துள்ளார்.