Published : 10 Mar 2020 09:15 AM
Last Updated : 10 Mar 2020 09:15 AM

கரோனா வைரஸ்: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரிப்பு- மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது

இந்தியாவில் மேலும் 8 பேர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதித்திருப்பது உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாட்டில் 47 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் முதல் கரோனா தொற்று பதிவாகியுள்ளது, மகாராஷ்ட்ரத்தில் 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் கோவிட்-19 கரோனா வைரஸ் தொற்றிற்கு மேலும் 35 பேர் பாதிக்கப்பட, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,513 ஆக அதிகரித்துள்ளது.

தென் கொரியாவில் கரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே சி.எஸ்.ஐ.ஆர். ஆய்வகங்களில் கோவிட்-19 வைரஸை முறியடிக்கும் மருந்து தயாரிப்புக்கான ஆராய்ச்சி தொடங்கப்பட்டிருப்பதாக தலைமை இயக்குநர் ஷேகர் சி.மண்டே தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x