Published : 09 Mar 2020 09:17 PM
Last Updated : 09 Mar 2020 09:17 PM

அயல்நாட்டு பயணங்களின்றியே டெல்லி நபருக்கு கரோனா தொற்றியுள்ளதாக அதிகாரிகள் தகவல்  

டெல்லியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நால்வரில் நான்காவது நபர் வெளிநாடுகளுக்கு சென்றதான பயண வரலாறு எதுவும் இல்லை ஆனாலும் அவருக்குக் கரோனா தொற்று பீடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொது இடத்தில் பேடிஎம் ஊழியர் ஒருவருடன் அவர் தொடர்பு வைத்துக் கொண்டதால் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த 4வது கரோனா வைரஸ் நோயாளி தற்போது சஃப்தர்ஜங் மருத்துவமனையில் தனிமைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இவர் ஒரு பெண் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர் கடந்த சனியன்று இவருக்கு வைரஸ் தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டு பிறகு நாவல் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவருக்கு முன்னர் மயூர் விஹாரைச் சேர்ந்த 45 வயது, குர்கவானில் பணியாற்றும் பேடிஎம் பணியாளர், இன்னொருவர் தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பிய மேற்கு டெல்லி பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் ஆகிய 3 பேர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டு தனிப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x