Published : 09 Mar 2020 06:51 AM
Last Updated : 09 Mar 2020 06:51 AM
குடியுரிமை திருத்தச் சட்டத்தை மையமாக வைத்து டெல்லியில் அண்மையில் நடைபெற்ற கலவரச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 2,193 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். 690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த மாதம் ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த கலவரம் தொடர்பாக, டெல்லி போலீஸார் சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தக் கலவரச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 2,193 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT