Published : 06 Mar 2020 09:53 AM
Last Updated : 06 Mar 2020 09:53 AM
சட்டத்தை அமல்படுத்துவதில் திறம்பட பணியாற்ற வேண்டும் என்று போலீ்ஸ் அதிகாரிகளுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அறிவுறுத்தி உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் போலீஸ் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தின் சார்பில் டெல்லியில் நேற்று கருத்தரங்கு நடந்தது. இதில் இளம் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியதாவது:
ஜனநாயகத்தில் சட்டத்தை உருவாக்குவது மிகவும் புனித மானது. அந்த சட்டத்தை போலீஸ்அதிகாரிகளாகிய நீங்கள் அமல்படுத்துகிறீர்கள். சட்டத்தை அமல்படுத்துவதில் போலீஸார் திறம்பட செயலாற்ற வேண்டும்.
சட்டத்தைக் காக்க முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுவது ஜனநாயகத்தில் மிகவும் முக்கியமானது. சட்டத்தை அமல்படுத்துவதில் போலீஸார் தோல்வியடைந்தால் ஜனநாயகம் தோல்வியடையும்.
மக்களிடம் போலீஸார் பற்றிய நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டும். போலீஸார் மீது சமூகத்தில் நம்பிக்கையை ஏற் படுத்த வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் போலீஸ் அதிகாரிகள் நேர்மையாகவும் திறமையாகவும் பணியாற்ற வேண்டும்.
மக்களிடம் போலீஸார் மீது நல்ல எண்ணம் ஏற்பட்டால்தான் அவர்களிடம் நம்பிக்கை உருவாகும். மனோரீதியாகவும் அவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள். பயிர்களை காக்கும் வேலி போல சமூக அமைதியை போலீஸார் காக்க வேண்டும். இவ்வாறு அஜித் தோவல் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT