Last Updated : 29 Feb, 2020 04:19 PM

 

Published : 29 Feb 2020 04:19 PM
Last Updated : 29 Feb 2020 04:19 PM

மத்திய பிரதேசத்தில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்; 2 குழந்தைகள் உயிர் பிழைக்கவில்லை.

ஷியோபூர் (ம.பி)

ஒரே பிரசவத்தில் 6 பெண் குழந்தைகளை ஒரு தாய் பெற்றெடுத்த அரிதான நிகழ்வு மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. இதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துவிட்டன.

மாநிலத்தின் ஷியோபூரில் மாவட்ட மருத்துவமனையில் இன்று காலை நடைபெற்ற பிரசவத்தில் 6 பெண் குழந்தைகள் பிறந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவத் துறையில் இப்படி ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறப்பதை செக்ஸ்டூப்லெட்ஸ் என்று அழைக்கின்றனர்.

ஷியோபூர் மாவட்ட மருத்துவமனையில் நடைபெற்ற இப்பிரசவத்தின்போது பிறந்த இரண்டு குழந்தைகள் உயிர் பிழைக்கவில்லை.

மற்ற 4 கைக்குழந்தைகளுக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக Sick Newborns Care Unit எனப்படும் பிறந்த குழந்தைகளுக்கான பராமரிப்புக்காக உளள ஒரு தனிப்பிரிவில் நம்பிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளனர்.

தாயின் நிலை திருப்திகரமாக இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x