Published : 28 Feb 2020 03:21 PM
Last Updated : 28 Feb 2020 03:21 PM

முஸ்லிம்களுக்கு கல்வியில் 5% இடஒதுக்கீடு:  மகாராஷ்டிர அரசு உறுதி

நவாப் மாலிக்

மும்பை

மகாராஷ்டிராவில் அரசு கல்விநிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் அரசு கல்விநிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும் அதனை மாநில அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

இந்தநிலையில் இதுபற்றி மாநில அமைச்சர் நவாப் மாலிக் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மகாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கு அரசு கல்விநிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்க மாநில உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இருப்பினும் கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக அரசு இடஒதுக்கீடு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டு இடஒதுக்கீடு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x