Published : 28 Feb 2020 10:51 AM
Last Updated : 28 Feb 2020 10:51 AM

அதிபர் ட்ரம்புடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்: லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் 6 ராணுவ ஹெலிகாப்டர்களை 2021-ல் வழங்குகிறது

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட போது போடப்பட்ட 2.2 பில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்தின்படி எம்.ஹெச்.60ஆர் மல்ட்டி ரோல் ஹெலிகாப்டர்களை லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் 2021இல் இந்தியக் கடற்படையினருக்கு வழங்குகிறது.

2025-ல் முழு ஆர்டரும் சப்ளை செய்யப்படவுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓராண்டுக்குள் 2 ஹெலிகாப்டர்கள் கிடைக்கப் பெறுவோம் என்றும் 2021-ல் 6 ஹெலிகாப்டர்களும் வந்து சேரும் என்றும் நேவி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஹெலிகாப்டர்களை தாக்குதலுக்கும் பயன்படுத்தலாம் தாக்குதல்களைத் தடுக்கவும் பயன்படுத்தலாம். நீர்மூழ்கிக் கப்பல் போர்களிலும் பயன்படுத்தக் கூடியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x