Published : 27 Feb 2020 05:05 PM
Last Updated : 27 Feb 2020 05:05 PM

டெல்லி கலவரத்தில் ஆம் ஆத்மி நபர்களுக்கு தொடர்பு இருந்தால் இரட்டை தண்டனை: கேஜ்ரிவால் உறுதி

டெல்லி கலவரத்தில் ஆம் ஆத்மியை சேர்ந்த நபர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதியானால் இரட்டை தண்டனை வழங்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.

வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஏற்கெனவே பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ள நிலையில் மேலும் இறந்தநிலையில் மேலும் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் டெல்லி கலவரத்தில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த கவுன்சிலருக்கு தொடர்பு இருப்பதாக பாஜக புகார் தெரிவித்து இருந்தது. இதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பதிலளித்ததாவது:

‘‘டெல்லி கலவரத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் தண்டனை கிடைக்கும். கலவரத்தில் ஆம் ஆத்மியை சேர்ந்த நபர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதியானால் இரட்டை தண்டனை வழங்க வேண்டும். தேசிய பாதுகாப்பு விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம்.

டெல்லி கலவரத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற நிதியுதவி வழங்கப்படும்’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x