Published : 24 Feb 2020 10:32 AM
Last Updated : 24 Feb 2020 10:32 AM

‘‘புறப்பட்டு விட்டேன்’’- ட்ரம்ப்; ‘‘சற்று நேரத்தில் சந்திக்கிறேன்’’ - பிரதமர் மோடி பதில்

அகமதாபாத்

அமெரக்க அதிபர் ட்ரம்ப்பை வரவேற்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2 நாள் பயணமாக இன்று நண்பகலில் இந்தியா வருகிறார். அகமதாபாத் வரும் ட்ரம்புக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்கப்படுகிறது. அமெரிக்க அதிபரின் வருகையை ஒட்டி அகமதாபாத் நகரில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 25,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய வருவதற்காக அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட ட்ரம்ப் மெலானியாவுடன் இந்தியாவுக்கு புறப்பட்டு விட்டேன் என ட்வீட் செய்து இருந்தார்.

இதற்கு பதிலளித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

உங்கள் வருகைக்காக இந்தியா ஆவலுடன் காத்திருக்கிறது. உங்கள் வருகையால் இருநாடுகளிடையேயான உறவு மேலும் வலுப்பெறும். விரைவில் உங்களை அகமதாபாத்தில் சந்திக்கிறேன்’’ என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x