Published : 21 Feb 2020 07:58 AM
Last Updated : 21 Feb 2020 07:58 AM
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் குறைந்துள்ளதாக ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே கூறினார்.
ராணுவத்தில் பெண்களுக்கு பாகுபாடு காட்டக்கூடாது, அவர்களுக்கு கமாண்டர் உள்ளிட்ட உயர் பதவிகள் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இது தொடர்பாக ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்திய ராணுவம் தனது வீரர்களிடம் மதம், சாதி, இனம் அல்லது பாலினம் அடிப்படையில் பாகுபாடு காட்டியதில்லை. இதனால்தான் 1993-ம் ஆண்டிலேயே ராணுவத்தில் பெண் அதிகாரிகளை சேர்க்கத் தொடங்கினோம். சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பை முன்னெடுத்துச் செல்லும் பணியில் தெளிவான பாதையை உச்ச நீதிமன்ற தீர்ப்பு காட்டும். ராணுவத்தில் நிரந்தரப் பணியில் இருக்க விருப்பமா எனக் கேட்டு பெண் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது” என்றார்.
ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து அவர் கூறும்போது, “காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன. தீவிரவாத குழுக்களுக்கு ராணுவம் தொடர்ந்து நெருக்குதல் அளித்து வருகின்றது. ஜம்மு காஷ்மீருக் தனி படைப்பிரிவு தொடர்பாக எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன் விரிவான விவாதம் நடத்தப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT