Last Updated : 20 Feb, 2020 06:56 PM

 

Published : 20 Feb 2020 06:56 PM
Last Updated : 20 Feb 2020 06:56 PM

டெல்லியில் உ.பி. பவனுக்கு வெளியே போராட்டம் நடத்திய ஜாமியா மாணவர்கள் கைது 

டாக்டர் கஃபீல் கான் உட்பட கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜாமியா மிலியா ஒருங்கிணைப்பு குழு நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பாக மாணவர்களை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

மந்திர் மார்க் காவல் நிலையம் சுமார் 50 மாணவர்களைக் கைது செய்திருப்பதாக ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு தெரிவிக்கிறது. ஆனால் புதுடெல்லி டிசிபி இன்னமும் அந்த எண்ணிக்கையை உறுதி செய்யவில்லை.

சிஏஏ எதிர்ப்புப் பிரச்சாரத்தில் வன்முறைக் கருத்துகளை தூண்டிவிடும் விதமாக பேசிய குற்றச்சாட்டில் டாக்டர் கஃபீல் கான் கைது செய்யப்பட்டதையும் உலீமா தேசிய பொதுச் செயலர் தாஹிர் மத்னி ஆகியோரை விடுவிக்கக் கோரி டெல்லியில் உள்ள உ.பி. பவனை நோக்கி மாணவர்கள் பேரணி மேற்கொண்டதாகவும் அவர்கள் உ.பி. மாநிலத்துக்கு எதிராக கோஷமிட்டதாகவும் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

இதே பேரணியின் போது இன்னொரு மாணவர்கள் குழு சிஏஏ, என்.ஆர்.சி.க்கு எதிரான பதாகைகள், கோஷங்களுடன் உ.பி. பவன் முன் போராட்டம் நடத்த இவர்களையும் கைது செய்ததாக போலீஸ் தரப்பினர் பிடிஐ-யிடம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x