Published : 18 Feb 2020 08:13 AM
Last Updated : 18 Feb 2020 08:13 AM
முப்படை தளபதி பிபின் ராவத் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்திய வான் பாதுகாப்பு படை அடுத்த ஆண்டு தொடக்கத்திலும் தீபகற்ப படை அடுத்த ஆண்டு இறுதியிலும் தொடங்கப்படும். வான் பாதுகாப்பு படைக்கு விமானப் படை (ஐஏஎப்) தலைமை வகிக்கும். நீண்ட தொலைவு ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு சாதனங்கள் அனைத்தும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் வரும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இது நடைமுறைக்கு வரும்.
இந்திய கடற்படையின் கிழக்கு மற்றும் மேற்கு படைப்பிரிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு தீபகற்ப படைப்பிரிவு ஏற்படுத்தப்படும். இந்த படைப்பிரிவு 2021 இறுதியில் நடைமுறைக்கு வரும். பயிற்சிக்கு என்று தனிப் பிரிவு ஏற்படுத்தப்படும். அதுபோல் போர் தளவாடங்களுக்காகவும் தனிப்பிரிவு உருவாக்கப்படும். ஜம்மு காஷ்மீருக்கு தனி படைப்பிரிவு ஏற்படுத்தப்படுவதை இந்தியா எதிர்நோக்கியுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க் கப்பலின் செயல்திறனை ஆராய்ந்த பிறகு, கடற்படைக்கு கூடுதல் போர்க் கப்பலுக்கான தேவை குறித்து ஆராயப்படும்" என்றார்.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT