Published : 14 Feb 2020 08:34 PM
Last Updated : 14 Feb 2020 08:34 PM
அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை ஜூன் -23-ம் தேதி தொடங்கும் என ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில், இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, நாடு முழுவதும், ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.
ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் கிரீஷ் சந்திர முர்மு தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு இந்த ஆண்டுக்கான வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஜூன் 23-ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டது.
அமர்நாத் யாத்திரை ஜூன் மாதம் 23ம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டது. 42 நாட்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை, ஆகஸ்ட் 3ம் தேதியுடன் நிறைவடையும் என காஷ்மீ் அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT