Published : 12 Feb 2020 06:06 PM
Last Updated : 12 Feb 2020 06:06 PM

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மம்தா பானர்ஜி மீண்டும் பேரணி

கொல்கத்தா

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று மீண்டும் பேரணி நடத்தினார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

குடியுரிமைச் சட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கடுமையாக எதிர்த்து வருகிறார். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் துர்காபூரில் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று பேரணி நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜி பங்கேற்று பேசியதாவது:

‘‘குடியுரிமைச் சட்டம், குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இதனை மேற்குவங்க மாநிலத்தில் அமல்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.’’ எனக் கூறினார்.

தவறவிடாதீர்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x