Published : 12 Feb 2020 03:33 PM
Last Updated : 12 Feb 2020 03:33 PM
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் சரியான தலைவரை முன்னிறுத்த முடியாமல் போனதே காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
கடந்த 8-ம்தேதி 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளைக் கைப்பற்றி அசுர பலத்துடன் அபார வெற்றி பெற்றுள்ளது. பாஜக 8 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில், அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக மூன்றாவது முறையாகப் பதவியேற்க உள்ளார். பிப்ரவரி 16-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
இதுகுறித்து கபில் சிபல் கூறியதாவது:
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் சரியான தலைவரை முன்னிறுத்த முடியாமல் போனதே காங்கிரஸ் தோல்விக்கு காரணம். எதிர்காலத்தில் கட்சியை வளர்க்க தேவையான நடவடிக்கையை எடுப்போம்.
எனினும் டெல்லி தேர்தலில் மக்களை பிரத்தாளும் அரசியலை பாஜக செய்தது. ஆனால் அதற்கு மக்கள் சரியான பாடம் புகட்டி விட்டனர். ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் மக்களை பிரிக்கும் வகையில் பேசுவதை மத்திய அமைச்சர்கள் இனிமேலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இதனை அமித் ஷாவும் உணர்ந்து இருப்பார். பாஜகவின் தோல்வி இத்துடன் முடியப்போவதில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியிருந்தார். அது மிகச்சரியானது’’ எனக் கூறினார்.
தவறவிடாதீர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT