Published : 11 Feb 2020 03:41 PM
Last Updated : 11 Feb 2020 03:41 PM
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியா வெற்றி பெற்றார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 8-ம் தேதி நடந்து முடிந்தது. பெரும் பரபரப்படன் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 63 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் சூழல் உள்ளது. எதிர்க்கட்சியான பாஜக 7
தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் எந்தத் தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை.
இந்த தேர்தலில் டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியா பட்பார்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்டார். தொடக்கநிலையில் அவர் 112 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.
சிறிது நேரத்துக்கு பிறகு பின்னடைவை சந்தித்தார். நீண்டநேர இழுபறிக்கு பிறகு அவர் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரவீந்தர் சிங் நீகியை விடவும் 3,500 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
கடந்த 2015-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மணிஷ் சிசோடியா 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2013-ம் ஆண்டு தேர்தலில் 11ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT