Published : 09 Feb 2020 11:17 AM
Last Updated : 09 Feb 2020 11:17 AM

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும்: ‘திஷா' சட்டம் பற்றி ஜெகன்மோகன் கருத்து

அமராவதி: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திர வரம் பகுதியில் ‘திஷா’ காவல் நிலையத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், அங்குள்ள ஆதிகவி நண்ணைய்யா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ‘திஷா’ சட்டம் வரலாற்று சிறப்புமிக்க ஒன்று. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு வெகு விரைவில் தண்டனை கிடைப்பதை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது.

நிர்பயா வழக்கில் 8 மாதமாகியும் இதுவரை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவில்லை.ஆனால், ‘திஷா’ சட்டத்தின் கீழ் 7 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, 21 நாட்களுக்குள் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்படும். இம்மாத இறுதிக்குள் ஆந்திர மாநிலத்தில் 18 திஷா காவல் நிலையங்கள் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் சுசரிதா, ஆந்திர மாநில தொழில்துறை அமைப்பு தலைவர் ரோஜா, டிஜிபி கவுதம் சவாங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x