Published : 03 Feb 2020 09:21 PM
Last Updated : 03 Feb 2020 09:21 PM
சீனாவின் ஹூபே மாகாணம், வுஹான் நகரில் உயிரைக் குடிக்கும் கரோனா வைரஸ் உருவானது. அந்த வைரஸ் சீனா மட்டுமின்றி, 27 நாடுகளுக்கு வேகமாகப் பரவியுள்ளது.
கேரளாவில் 3 பேர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அங்கு கவலை ஏற்பட்டுள்ளது.
இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை, 361 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் தாக்கப்பட்டுள்ளனர். வுஹான் நகரமே சீன ராணுவக்கட்டுப்பாட்டுக்குக் கீழ் வந்துவிட்டது. இன்னொரு நகரமும் முழுதும் லாக் அவுட் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, கேரளாவில் 3 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பை மாநில பேரிடராக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.
மாநில சுகாதார அமைச்சர் கேகே.ஷைலஜா தெரிவிக்கும் போது, “இந்த அறிவிப்பு மக்களை பயமுறுத்துவதற்காக அல்ல. வைரஸ் பரவலைத் தடுக்க சிறந்த நடவடிக்கைகள் தேவை என்பதை அறிவுறுத்தவே மாநில பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT