மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள், முழுமையான விவரங்கள் தரப்பட்டுள்ளன.
· தனிநபர்களுக்கு புதிய வருமானவரி கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சில விலக்குகளுடன் வரிச்சலுகை பெறலாம்.
· புதிய வரிவிதிப்பின்படி, ஆண்டுக்கு ரூ.5-7.5 லட்சம் வரை 10 சதவீதம் வரி, ரூ.7.5-ரூ.10 லட்சம்வரை 15 சதவீதம் வரி, ரூ.10-12.5 லட்சம் வரை 20 சதவீதம் வரி, ரூ.12.5 முதல் 15 லட்சம் வரை 25 சதவீதம் வரி, ரூ.15 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் வரி
· ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு
· வங்கியில் டெபாசிட் செய்துள்ள பணத்துக்கான காப்பீடு தொகை ரூ. ஒரு லட்சத்திலிருந்து ரூ.5லட்சமாக உயர்வு
· எல்ஜசி காப்பீடு நிறுவனத்தில் தனக்கிருக்கும் பங்கை மத்திய அரசு ஐபிஓ மூலம் விற்க முடிவு
· நிதிப்பற்றாக்குறை 2020-ம் நிதியாண்டில் 3.8 சதவீதமாக இருக்கும், முன்பு 3.3 சதவீதமாக இலக்க நிர்ணயிக்கப்பட்டது
· 2020-21-ம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 3.5 சதவீதமாக இருக்கும்
· 2020-21-ம் ஆண்டில் அரசின் பங்குவிலக்கல் மதிப்பு ரூ.1.20லட்சம் கோடி இலக்கு. நடப்பு நிதியாண்டில் ரூ.65ஆயிரம் கோடி திரட்டப்பட்டுள்ளது
· 2020-21-ம் ஆண்டில் வருவாய் ரூ.22.46 லட்சம் கோடி, செலவு ரூ.30.42 லட்சம் கோடி.
· ஆதார் அடிப்படையில் பான்கார்டு உடனடியாக ஒதுக்கப்படும்
· மத்திய அரசின் கடன் 2014 மார்ச்சில் 52.2சதவீதத்தில் இருந்து 2019 மார்ச்சில் 48.7 சதவீதமாகக் குறைவு
· ஐடிபிஐ வங்கியின் அரசிடம் இருக்கும் பங்குகள் தனியாருக்கும், அன்னியமுதலீட்டாளர்களுக்கும் பங்குச்சந்தை மூலம் விற்கப்படும்.
· பாதுகாப்புத்துறைக்கு 2020-21ம் நிதியாண்டில் ரூ.3.23 லட்சம் கோடி ஒதுக்கீடு. நடப்பு நிதியாண்டில் ரூ3.16 லட்சம் கோடி ஒதுக்கீடு
· தனியார், அரசு பங்களிப்புடன் வேளாண் பொருட்கள் கொண்டு செல்ல தனி ரயில்
· வேளாண் பொருட்கள், விரைவில் அழுகும் காய்கறிகள், பழங்களைக் கொண்டு செல்ல கிஷான் உதான் விமான சேவை
· வேளாண்கடன் இலக்கு 2020-21-ம் ஆண்டில் ரூ.15 லட்சம் கோடி
· நபார்டு வங்கியின் மறுநிதி திட்டம் மூலம் ரூ.2.83 லட்சம் கோடிக்கு வேளாண் மற்றும் தொடர்பான பணிகளுக்கு ஒதுக்கீடு
· ஆயுஷ்மான்பாரத் திட்டத்தில் தனியார் பங்களிப்புடன் மருத்துவமனை அமைத்தல்
· சுகாரத்துறைக்கு ரூ.69 ஆயிரம் கோடியும், தூய்மை இந்தியாதிட்டத்துக்கு ரூ.12,300 கோடியும் 2020-21ம் ஆண்டில் ஒதுக்கீடு
· விரைவில் புதிய கல்விக் கொள்கை அறிவி்ப்பு
· கல்வித்துறையில் அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி, வர்த்தகரீதியான கடன் பெறவும்அனுமதி
· தேசிய காவல்துறை பல்கலை, தேசிய தடயவியல்அறிவியல் பல்கலை அமைத்தல்
· கல்வித்துறைக்கு ரூ.99,300 கோடி ஒதுக்கீடு, மற்றும் திறன் மேம்பாட்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
· செல்போன், மின்னனு சாதனங்கள், செமி கன்டக்டர் ஆகியவற்றின் உற்பத்தியை ஊக்குவித்தல்
· தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் மூலம் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ரூ.1,480 கோடி ஒதுக்கீடு
· ஏற்றுமதியாளர்கள் மத்திய, மாநில, உள்ளூர் அளவில் டிஜிட்டல் முறையில் வரிகளை ரீபண்ட் பெறுதல்
· விரைவில் தேசிய சரக்குப்போக்குவரத்துக் கொள்கை வெளியீடு, அதிகமான வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்துதல்
· 2023-ம் ஆண்டுக்குள் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலை முடிக்கப்படும், விரைவில் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் தொடங்கப்படும்
· முக்கியமான சுற்றுலாத் தளங்களுக்கு அதிகமான தேஜாஸ் ரயில்கள் இயக்கப்படும்.
· மும்பை-அகமதாபாத் இடையே அதிவேக ரயில் இயக்க செயலூக்கம் கொடுக்கப்படும்
· முக்கியத் துறைமுகங்களில் ஒன்றை கார்பரேட் மயமாக்கி, பங்குகள் பட்டியலிடப்படும்
· போக்குவரத்து கட்டமைப்புக்கு ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு
· புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்திட்டங்களுக்கு ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
· தனியார் துறை டேட்டா சென்டர் பூங்கா அமைக்க ஊக்கம்அளிக்கப்படும்.
· பாரத்நெட் திட்டத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடிஒதுக்கீடு
· பெண்கள் திருமண் செய்துகொள்ளக்கூடிய வயது குறித்து பரிந்துரை செய்யகுழு
· எஸ்சி பிரிவினருக்கு ரூ.85ஆயிரம் கோடியும், எஸ்டி பிரிவினருக்கு ரூ.53,700 கோடியும் ஒதுக்கீடு
· கம்பெனிச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்.
· ஜம்மு,காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.30,757 கோடி ஒதுக்கீடு
· கார்ப்பரேட் பங்குப்பத்திரங்களில் எப்பிஐ முதலீட்டை 9 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்த அனுமதி
WRITE A COMMENT