Last Updated : 01 Feb, 2020 12:59 PM

 

Published : 01 Feb 2020 12:59 PM
Last Updated : 01 Feb 2020 12:59 PM

தனியார்-அரசு பங்களிப்புடன் 1,150 ரயில்கள், 100 விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

2025-ம் ஆண்டுக்குள் நாட்டில் 100-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். உள்கட்டமைப்புக்கான திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் பேசுகையில், "உதான் திட்டம் மூலம் 2025-ம் ஆண்டுக்குள் நாட்டில் 100-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு, தரம் உயர்த்தப்படும்.

2020-21 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் போக்குவரத்துக் கட்டமைப்புத் திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1.70 லட்சம் கோடியை வழங்க இருக்கிறது.

1,150 ரயில்களை தனியார், அரசு பங்களிப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். 4 ரயில் நிலையங்கள் தனியார் மூலம் புனரமைப்பு செய்யவும், மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் தேஜாஸ் வரை ரயில்கள் இயக்கப்படும். நீண்ட சோலார் மின் உற்பத்தி திட்டங்களை ரயில்வே இருப்புப் பாதை அருகே அமைக்கும் திட்டம் பரிசீலனையில் இ ருக்கிறது.

சிறு, குறு ஏற்றுமதியாளர்களுக்கு காப்பீடு திட்டத்தின் மதிப்பு உயர்த்தப்படும்.

மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பழைமையான மின்மீட்டர்கள் மாற்றப்பட்டு, ஸ்மீர்ட் ப்ரீபெய்ட் மின்மீட்டர்கள் பொருத்தப்படும். ப்ரீபெய்ட் மீட்டர் பொருத்த நுகர்வோர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். இந்தத் திட்டம் அடுத்த 3 ஆண்டுகளில் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் 16 ஆயிரம் கி.மீ. இருப்பதை 27 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கப்பட்டு, வெளிப்படையான விலை நிர்ணயிக்கப்படும்’’ என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x