Last Updated : 29 Jan, 2020 08:36 PM

 

Published : 29 Jan 2020 08:36 PM
Last Updated : 29 Jan 2020 08:36 PM

நிர்பயா வழக்கு: குற்றவாளி வினய் குமார் குடியுரசு தலைவரிடம் கருணை மனுத் தாக்கல்

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளி வினய் குமார் : கோப்புப்படம்

புதுடெல்லி

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளி வினய் குமார் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்துள்ளார்.

குற்றவாளியின் வினய் குமார் வழக்கறிஞர் ஏ.பி. சிங், குடியுரசு தலைவர் மாளிகையில் கருணை மனுவைத் தாக்கல் செய்து, அதற்குரிய தாக்கல் கடிதத்தையும் பெற்றுள்ளார்.

மற்றொரு குற்றவாளியான முகேஷ் சிங் ஏற்கனவே குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்த நிலையில் அதைக் கடந்த 17-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனு நிராகரிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் முகேஷ் சிங்கிற்கான அனைத்து சட்டக் கதவுகளும் அடைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்யாமல் இருந்த வினய் குமார் இப்போது தாக்கல் செய்துள்ளார்.

இதில் குற்றவாளிகள் வினய் குமார், முகேஷ் குமார் சிங் ஆகியோர் ஏற்கெனவே தங்களின் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மற்றொரு குற்றவாளியான அக்சய் குமார் இன்று உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குற்றவாளிகள் நான்கு பேருக்கும் டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, வரும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

குற்றவாளியான அக்சய் குமார் இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

இன்னும் தண்டனை நிறைவேற்ற இருநாட்களே இருக்கும் நிலையில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு குற்றவாளி வினய் குமார் கருணை மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதுகுறித்து குற்றவாளி வழக்கறிஞர் ஏ.பி.சிங் நிருபர்களிடம் கூறுகையில், " குடியரசுத் தலைவரிடம் வினய் குமார் சார்பில் கருணை மனுத் தாக்கல் செய்திருக்கிறேன். கடிதம் பெறப்பட்டதற்கான சான்றும் கிடைத்துள்ளது" எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x