Last Updated : 26 Jan, 2020 12:32 PM

 

Published : 26 Jan 2020 12:32 PM
Last Updated : 26 Jan 2020 12:32 PM

காஷ்மீரில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடத்தவிருந்த சதித்திட்டம் முறியடிப்பு; ஜெய்ஷ் இ முகமதுவின் மேற்பார்வையாளர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜெய்ஷ் இ முகமது கும்பல் நடத்தவிருந்த சதித்திட்டம் பாதுகாப்புப் படையினரால் நேற்று முறியடிக்கப்பட்டது. தீவிரவாத இயக்கத்தின் மேற்பார்வையாளர் உள்ளிட்ட மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வாகனங்கள் மீது பிப்ரவரி 14, 2019 தாக்குதலில் 40 துருப்புக்களின் உயிரைக் கொன்ற ஜெய்ஷ் முகம்மது தீவிரவாதிகளை மேற்பார்வையிட்ட யாசிரும் ஒருவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

காவல்துறையினரின் பதிவுகளின்படி, யாசிர் 2016 முதல் பயங்கரவாத நடவடிக்கைகளின் வரலாற்றைக் கொண்டிருந்தவர். அப்பகுதியில் ஜெ.எம் தளபதியாகவும் அவர் செயல்பட்டு வந்தார். அவர் மீது பல பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் அட்டூழியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜெய்ஷ் தலைமையும் காஷ்மீரில் இருந்து அழிக்கப்பட்டுவிட்டது.இத்துடன் ஜெய்ஷ் இ கும்பலின் முழு தொகுதியும் அழிக்கப்பட்டதாக காஷ்மீர் காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது இதில் 15 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் கே.ஜே.எஸ் தில்லான் மற்றும் காஷ்மீர் காவல்துறைத் தலைவர் இருவரும் கலந்துகொண்டு பல முக்கிய தகவல்களைத் தெரிவித்தனர்.

செய்தியாளர்களிடம் 15 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் கே.ஜே.எஸ் தில்லான் கூறியதாவது:

அவந்திபோராவில் உள்ள ஹரி பரி காமில் ஒரு கூட்டு நடவடிக்கை சனிக்கிழமை காலை தொடங்கப்பட்டது. ஆரம்ப என்கவுண்டரில் மூன்று வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் ராணுவத்தின் 92 அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிற்பகலில் நடந்த இறுதித் தாக்குதலில், யாசீர், மற்றும் புர்ஹான் மற்றும் மூசா (அவரது கூட்டாளிகள்) ஆகிய மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மூசா மற்றும் யாசிர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்றாலும், புர்ஹான் ஒரு உள்ளூர் கிளர்ச்சியாளர் என்று கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டன.

குடியரசு தின - நாளில் இந்த தொகுதி சில பெரிய தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று ரகசியத் தகவல்கள் கிடைத்திருந்தன குடியரசு தினத்தன்று ஒரு பெரிய சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்த ஜெய்சே முகம்மது கும்பலின் மேற்பார்வையாளர் யாசிர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கடந்த நான்கு நாட்களாக இந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தினரின் சதித்திட்டங்கள் குறித்து பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்துவந்தன. இந்த கும்பலின் ஒரு தீவிரவாதியான சைபுல்லா புதன்கிழமை டிராலில் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்.

இந்த மாத தொடக்கத்தில் கையெறி குண்டுத் தாக்குதலுக்காக கைது செய்யப்பட்ட ஐந்து ஜெய்ஷ் இ முகம்மது ஆட்களுடன் இந்த கும்பலுடன் தொடர்பில் இருந்ததுதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பிப்ரவரி 14 புல்வாமா பயங்கரவாத தாக்குதலின்போது அதனை மேற்பார்வை செய்தது தளபதி யாசிர். புல்வாமா தாக்குதலை மேற்பார்வை செய்த யாசிர் ஒரு வெடிகுண்டு நிபுணர், எல்லையைத் தாண்டி வரும் போராளிகளுடன் ஒருங்கிணைக்கக் கூடியவராக அவர் இருந்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை தலைவர் கூறியதாவது:

ஜெய்ஷ் தலைமையும் காஷ்மீரில் இருந்து அழிக்கப்பட்டுவிட்டது. இத்துடன் ஜெய்ஷ் இ கும்பலின் முழு தொகுதியும் அழிக்கப்பட்டது. தெற்கு காஷ்மீரில் தீவிரமாக 125 தீவிரவாதிகள் இயங்கி வந்தனர். அவர்களில் பெரும்பாலோர் உள்ளூர்வாசிகள். 2020 ஆம் ஆண்டில் ஜனவரி தொடக்க முதலே, தெற்கு காஷ்மீரில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன, மேலும் பல கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர்.

தீவிரவாதிகளுடன் சண்டை நடந்த என்கவுன்டர் தளத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் மற்ற பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அவற்றின் உடந்தையாக இருந்த உள்ளூர்வாசிகளை விசாரிக்க வழக்கு பதிவுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு காஷ்மீர் காவல்துறை தலைவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x