Last Updated : 25 Jan, 2020 06:48 PM

 

Published : 25 Jan 2020 06:48 PM
Last Updated : 25 Jan 2020 06:48 PM

டெல்லியில் ஷாஹீன் பாக் ஆர்ப்பாட்டங்களை நடத்துபவர் மீது வழக்கு: அசாம் அரசு முடிவு

அசாம் மாநிலம் குறித்து தேவையற்ற வகையில் தேசத்துரோகக் கருத்துக்களை தெரிவித்துவரும் டெல்லி ஷாஹீன் பாக் ஆர்ப்பாட்டங்களின் சூத்திரதாரி மீது வழக்கு என அசாம் அரசு முடிவு செய்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) மற்றும் தேசிய குடிமக்களின் பதிவேடு (என்.ஆர்.சி) ஆகியவற்றிற்கு எதிராக பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் டிசம்பர் 15 முதல் ஷாஹீன் பாக் மற்றும் அருகிலுள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அசாம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கில் பேசிவரும் டெல்லி ஷாஹீன் பாக் ஆர்ப்பாட்டங்களின் சூத்திரதாரி என்று கூறப்படுபவர் மீது அசாம் அரசாங்கம் தனது "தேசத்துரோக" கருத்துக்காக வழக்கு பதிவு செய்யும் என்று ஒரு அமைச்சர் சனிக்கிழமை தெரிவித்தார்.

கவுகாத்தியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மாநில நிதி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா கூறியதாவது:

டெல்லியில் ஷாஹீன் பாக் ஆர்ப்பாட்டங்களின்போது அதன் சூத்திரதாரி என்று கூறப்படும் நபர் பேசிய கருத்துக்கள் கடும் கண்டனத்துக்குரியது. நமக்குக் கிடைத்துள்ள ஆடியோ கிளிப் மாநில அரசால் சரிபார்க்கப்பட்டுள்ளது.

அசாமை இந்தியாவிலிருந்து துண்டித்து அதற்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் ஏனெனில் அங்கு வங்காளிகளான இந்துக்களும் முஸ்லீம்களும் கொல்லப்படுகிறார்கள் அல்லது தடுப்பு மையங்களில் வைக்கப்படுகிறார்கள் என்று அந்த நபர் பேசியுள்ளார்.

இப்படி அசாமுக்கு எதிரான அவரது தேசத்துரோக கருத்தை நாங்கள் அறிந்துள்ளோம். எனவே அந்த தனி நபர் மீது வழக்கு தொடர்வதென முடிவு செய்துள்ளோம்.

அசாமில் சட்டம் ஒழுங்கு நிலைமையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த நபர் பல தவறான தகவல்களை கூறியுள்ளார். இந்த நபரை நாங்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வருவோம், அவர்கள் இந்தியாவை அழிக்க விரும்புகிறார்கள் இதனால் அவர் சட்டப்படி தண்டிக்கப்படுவார்,

சிஏஏவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் முழு வடிவமும் அசாம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் ஒரே மாதிரியான கதைகளைக் கொண்டுள்ளது. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உறுப்பினர்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இந்த சமூகத்தின் ஒரு பகுதியினர் இந்தியாவுக்கு வெளியே மற்றொரு பாகிஸ்தானை உருவாக்க விரும்புகிறார்கள், அதை நாம் அனுமதிக்க முடியாது. இந்த சக்திகளுக்கு எதிராக நாங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

வடகிழக்கு மற்றும் அசாம் மக்கள் அந்த நபர் பேசியுள்ளதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அசாம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.''

இவ்வாறு அசாம் நிதியமைச்சர் ஷெர்ஜில் இஸ்லாம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x