

சமூக ஊடகங்களில் குழந்தைகள் ஆபாச காட்சிகளைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட மாநிலங்களவைக் குழு, 40 வகையான பரிந்துரைகளை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் நேற்று வழங்கியது.
குறிப்பாக அனைத்து வகையான செயலிகளையும்(ஆப்ஸ்) கண்காணிப்பது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பான பரிந்துரைகள் செய்யப்பட்டன.
காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த மாநிலங்களவைக் குழு தங்களின் பரிந்துரைகளையும், அறிக்கைகளையும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் வழங்கியது.
சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது பெரும் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ள நிலையில், அதைத் தடுக்கவும், ஆய்வு செய்யவும் வெங்கய்ய நாயுடு இந்த குழுவை அமைக்க உத்தரவிட்டார்
காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் அளித்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
இவ்வாறு பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது