Published : 23 Jan 2020 08:08 PM
Last Updated : 23 Jan 2020 08:08 PM
ஜே.என்.யு மற்றும் ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழகங்களில் மேற்கு உத்தரப்பிரதேசத்திலிருந்து 10% இட ஒதுக்கீடு அளித்தால் போதும் இந்தப் பல்கலைக் கழகங்களில் ஒருபோதும் தேசத்துக்கு எதிரான கோஷங்கள் எழாது என்று தெரிவித்துள்ளார் பாஜக ஆட்சியின் மத்திய அமைச்சர் சஞ்சீவ் பல்யான்.
"மேற்கு உத்தரப்பிரதேசத்துக்கு 10% இட ஒதுக்கீட்டை ஜே.என்.யு. மற்றும் ஜாமியா பல்கலைக் கழகங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தேச விரோத கோஷங்களை எழுப்புவர்களுக்கு சிறந்த சிகிச்சை இதுதான், அவர்கள் சிறந்த சிகிச்சை அளிப்பார்கள்” என்று சிஏஏவை ஆதரித்து மேற்கொண்ட பிரச்சாரத்தில் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “யார் இவர்கள்? எதற்காகத் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள்? ஜேஎன்யு, ஜாமியாவை ஒப்பிடும் போது மீரட் கல்லூரி மாணவர்கள் சிஏஏவை ஆதரிக்கிறார்கள். ” என்றார்.
சஞ்சீவ் பல்யான் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பிரபலமானவர், 60 பேர் கொல்லப்பட்ட முசாபர்நகர் கலவரங்கள் தொடர்பாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT