Published : 19 Jan 2020 09:49 AM
Last Updated : 19 Jan 2020 09:49 AM

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட நிதி திரட்ட நெல் விற்கும் அசாம் விவசாயிகள்

குடியுரிமை சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கும் எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அசாமில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக அசாமிலுள்ள அகில அசாம் மாணவர் அமைப்பு (ஏஏஎஸ்யு) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு வரும் 22-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

வழக்கை நடத்துவதற்கு நிதி திரட்டும் விதமாக அசாமிலுள்ள விவசாயிகள், தங்களது தேவைக்குப் போக எஞ்சியுள்ள நெல்லினை விற்று நிதி திரட்டி வருகின்றனர். இதற்காக தனியாக ஒரு நிதியை அவர்கள் உருவாக்கியுள்ளனர். திப்ருகர் மாவட்டம் சசோனி, மெர்பில் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் இந்த பணத்தை திரட்டி வருகின்றனர்.

வழக்கமாக தங்களது தேவைக்குப் போக எஞ்சிய நெல்லினை அவர்கள் விற்பது கிடையாது. ஆனால் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வழக்கை நடத்துவதற்காக நிதியை அவர்கள் சேகரித்து வருகின்றனர். சுமார் 85 கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், எஞ்சிய நெல்லினை விற்று பணத்தைத் திரட்டியுள்ளனர்.

இதுகுறித்து சசோனி பகுதியைச் சேர்ந்த விவசாயி ராகேஷ் போரா கூறும்போது, “இங்குள்ள விவசாயிகள் உபரியாக நெல்லினை உற்பத்தி செய்வார்கள். தங்களது தேவைக்குப் போக எஞ்சியுள்ள நெல்லினை சேமித்து வைப்பர். இப்போது வழக்கு நடத்துவதற்காக நெல்லை விற்று வருகின்றனர்.

இதற்காக சுமார் 600 மூட்டை நெல் சேகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x