காங்கிரஸில் இணைந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ

காங்கிரஸில் இணைந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ
Updated on
1 min read

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரனும், ஆம் ஆத்மி எம்எல்ஏவுமான ஆதர்ஷ் சாஸ்திரி இன்று அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி: பிப்ரவரி 8-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்தநிலையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் துவாரகா தொகுதி எம்எல்ஏவும், லால் பகதூர் சாஸ்திரியின் பேரனுமான ஆதர்ஷ் சாஸ்திரி இன்று அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் மூத்த தலைவர் பி.சி.சாகோ மற்றும் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா ஆகியோர் முன்னிலையில் அவர் காங்கிரஸில் இணைந்தார். ஆம் ஆத்மி சார்பில் துவாரகா தொகுதியில் மீண்டும் போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் ஆதர்ஷ் சாஸ்திரி காங்கிரஸில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in