Published : 18 Jan 2020 03:06 PM
Last Updated : 18 Jan 2020 03:06 PM
ஜாமீனில் வெளிவந்த, பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் சாட்சிக் கூறிய பெண்களை தாக்கியதில் ஒரு பெண் படுகாயமடைந்தார், இவர் சிகிச்சை பலனளிக்காமல் உ.பி. மாநிலம், கான்பூர் மருத்துவமனையில் மரணமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக 4 பேரைக் கைது செய்திருப்பதாக கான்பூர் போலீஸார் தெரிவித்தனர்.
கான்பூர் சீனியர் போலீஸ் எஸ்.பி. ஆனந்த் தேவ் திவாரி செய்தி ஏஜென்சியிடம் கூறும்போது, “இந்தச் சம்பவம் சகேரி பகுதியில் நடந்தது. 2018-ம் ஆண்டு பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஜாமீனில் வெளியே வந்தார். குற்றம்சாட்டப்பட்டவருக்கும் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. அப்போது குற்றம்சாட்டப்பட்டவர் மது போதையில் இருந்தார். அப்போதுதான் சாட்சியான இரு பெண்களையும் அவர்கள் அடித்து உதைத்து தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் ஒரு பெண் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண் ஒருவாரம் உயிருக்குப் போராடிய நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மரணமடைந்தார். நாங்கள் 4 பேரையும் கைது செய்துள்ளோம்” என்றார்.
இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக எஸ்.எஸ்.பி ஆனந்த் தேவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT