Published : 16 Jan 2020 04:05 PM
Last Updated : 16 Jan 2020 04:05 PM
சரப்ஜித் கவுர் என்பவரைக் கொலை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் மணீந்தர் சிங் என்பவரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் தொலைக்காட்சி லைவ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மணீந்தர் சிங் தான் கவுரைக் கொலை செய்ததாகக் கூறியதையடுத்து தொலைக்காட்சி ஸ்டூடியோவுக்கு வந்து போலீஸார் அவரைப் பிடித்துச் சென்றனர்.
சண்டிகரைச் சேர்ந்தவர் மணீந்தர் சிங், இவர் மொஹாலியில் புத்தாண்டு தினத்தன்று சரப்ஜித் கவுர் என்ற பெண் நர்ஸை கொலை செய்ததாக போலீஸாருக்குச் சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் பிராந்திய தொலைக்காட்சி நிலையத்துக்கு லைவ் நிகழ்ச்சிக்காக வந்த மணீந்தர் சிங், நிகழ்ச்சியில் சரப்ஜித் கவுரை தான் கொலை செய்ததாகவும் 2010ம் ஆண்டும் ஒரு கொலை செய்ததாகவும் கூறியதையடுத்து தொலைக்காட்சி நிர்வாகம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்க அவர்கள் தொலைக்காட்சி அலுவலகத்தில் மணீந்தர் சிங்கை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
நிகழ்ச்சி லைவ் ஆக சென்று கோண்டிருக்கும் போதே கைதால் அங்கு சிறிது பரப்பு ஏற்பட்டது.
மணீந்தர் சிங், கவுரை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் சிங்கின் குடும்பம் சாதி மாற்றுத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. கவுரும் தன்னைத் திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்ததாகக் கூறிய மணீந்தர் சிங், கவுருக்கு திடீரென வேறொரு ஆணின் நட்பு இருந்தது என்றார்.
இதனால் ஆத்திரமடைந்த சிங், கவுரை ஹோட்டல் அறையில் கழுத்தை நெறித்தும், தொண்டையைக் கத்தியால் குத்தியும் கொலை செய்தது அம்பலமானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT