Last Updated : 16 Jan, 2020 01:55 PM

 

Published : 16 Jan 2020 01:55 PM
Last Updated : 16 Jan 2020 01:55 PM

கட்டாக் அருகே லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் கவிழ்ந்து விபத்து - பலர் காயம்

மும்பை-புவனேஷ்வர் லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டதில் சுமார் 20 பயணிகள் காயமடைந்தனர்.

சலகான் மற்ரும் நெர்கண்டி ரயில்வே நிலையங்களுக்கு இடையே சரக்க்கு ரயிலின் கார்டு வேனில் இந்த ரயில் மோதியதால் 8 பெட்டிகள் கவிழ்ந்தன. வியாழன் காலை 7.00 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.

படுகாயமடைந்த 5 பயணிகள் கட்டாக் நகரில் உள்ள எஸ்.சி.பி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டனர், மற்றவர்கள் சம்பவ இடத்துக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

உயிர்ப்பலி எதுவும் இல்லை என்ற கிழக்குக் கடற்கரை ரயில்வே அதிகாரி கடும்பனியினால் மீட்புப் பணிகள் தாமதமடைந்ததாகத் தெரிவித்தார்.

இந்த விபத்தை அடுத்து பல ரயில்கள் நராஜ் நிலையிம் வழியாகத் திருப்பிவிடப் பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x