Published : 14 Jan 2020 01:42 PM
Last Updated : 14 Jan 2020 01:42 PM
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் பலியாகினர். ஒருவரை காணவில்லை.
இதுகுறித்து ஊடகங்கள், ”ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ராணுவ முகாம் அருகே திங்கட்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் பலியாகினர். ஒருவரை காணவில்லை. மற்றொரு ராணுவ வீரர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், கந்தர்பால் மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பொதுமக்கள் 5 பேர் பலியானதாகவும், 4 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT