Published : 13 Jan 2020 06:03 PM
Last Updated : 13 Jan 2020 06:03 PM
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது பாஜகவுக்குச் சாதகமானதுதான் என்று பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவரது ட்விட்டரில் பக்கத்தில் அவர் பதிவிட்டது:
குடியுரிமை சட்டத்தை எதிர்க்கட்சிகள் அதிகமாக எதிர்க்க எதிர்க்க தேர்தல்களில் பாஜ.கவுக்கு நல்லது. இந்த ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் தொடர்ந்தால், ஸ்ரீ 420 டில்லி மாநில தேர்தலில் தோல்வியடையக்கூடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீ420 என்று அவர் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான கேஜ்ரிவாலைத்தான் குறிப்பிட்டாரா என்பது தெரியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT