Published : 13 Jan 2020 04:03 PM
Last Updated : 13 Jan 2020 04:03 PM

டெல்லியில் தண்ணீர், மின்சார கட்டணம் வெறும் ரூ.1: பாஜக எம்.பி. தேர்தல் வாக்குறுதி

டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஏழைகளிடம் இருந்து தண்ணீர் மற்றும் மின்சார கட்டணமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா அறிவித்துள்ளார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி: பிப்ரவரி 8-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா கூறியதாவது:

‘‘டெல்லியில் ஏழைகளுக்கு தண்ணீர் மற்றும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என ஆம் ஆத்மி அறிவித்து பதவிக்கு வந்துது. 5 ஆண்டுகள் பதவியில் இருந்தும் இதனை நடைமுறைபடுத்தவில்லை.

டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஏழைகளிடம் இருந்து தண்ணீர் மற்றும் மின்சார கட்டணமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும். இதனை கட்சியின் தேர்தல் வாக்குறுதியாக அறிவிப்போம். தேர்தல் அறிக்கையில் இதனை சேர்க்கக்கோரி தேர்தல் அறிக்கை கமிட்டியிடம் பரிந்துரைத்துள்ளேன்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x