Published : 09 Jan 2020 12:49 PM
Last Updated : 09 Jan 2020 12:49 PM

ஜேஎன்யு வன்முறை: மாணவர்கள் மீண்டும் போராட்டம்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இன்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

டெல்லியில் உள்ள ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அமைதி பேரணியில் பங்கேற்றிருந்தனர். அப்போது, முகமூடிகளை அணிந்தபடி வந்த மர்ம நபர்கள் சிலர், இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து பேரணியில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர்.

இதனைத் தடுக்கச் சென்ற மற்ற மாணவர்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் உடனடியாக அங்கு வந்தனர். ஆனால், போலீஸாரை கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்ஷே கோஷ் உட்பட 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாஜக ஆதரவு ஏபிவிபி அமைப்பினரும், இடதுசாரி அமைப்பினரும் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நாட்டின் பல பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் வன்முறை சம்பவத்தை கண்டித்து டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இன்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக பகுதியில் திரண்ட மாணவ, மாணவியர் தாக்குதல் நடத்திய வன்முறை கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மாணவர்களின் போராட்டம் காரணமாக ஏராளமான போலீஸார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x