Published : 06 Jan 2020 03:41 PM
Last Updated : 06 Jan 2020 03:41 PM
அசாம் மாநில தேசிய குடிமக்கள் பதிவேட்டு ஒருங்கிணைப்பாளர் மதரீதியான கருத்துக்களையும் அறிக்கைகளையும் வெளியிட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து அசாம் அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமை அமர்வு இது தொடர்பாகக் கூறும்போது, “அவர் இப்படியெல்லாம் கூறக் கூடாது. அசாம் மாநில அரசு இதற்கு விளக்கம் அளித்தாக வேண்டும். அவர் விரும்பியதையெல்லாம் பேச முடியாது” என்று வழக்கறிஞர் கபில் சிபல் சுட்டிக்காட்டியதை அடுத்து அசாம் மாநில அரசிடம் கேள்வி எழுப்பினார்.
மாநில தேசிய குடிமக்கள் பதிவேட்டு ஒருங்கிணைப்பாளர் ஹிதேஷ் தேவ் சர்மாவை நீக்குவது உள்ளிட்ட மனுக்களை கோர்ட் விசாரித்து வருகிறது.
இன்னொரு மனுவில் 60 குழந்தைகள் என்.ஆர்.சியிலிருந்து நீக்கப்பட்டு அவர்களது பெற்றோர்கள் பெயர் சேர்க்கப்பட்ட விவகாரமும் எழுப்பப் பட்டுள்ளது.
ஆனால் அசாம் மற்றும் மத்திய அரசுகளின் பிரதிநிதிகளாக வாதாடிய வழக்கறிஞர்கள் கேகே வேணுகோபால் மற்றும் துஷார் மேத்தா இருவரும் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப் பட மாட்டாது என்று உறுதியளித்தனர்.
அதே போல் பெற்றோர் பெயர்கள் சேர்க்கப்பட்டு அவர்கள் குழந்தைகள் பெயர் சேர்க்கப்படாமல் இருப்பதால் குழந்தைகள் தடுப்புக் காவல் முகாமுக்கு அனுப்பப் படமாட்டார்கள் என்று அமர்வு தெரிவித்தது.
இது தொடர்பான மனுக்களுக்கு மத்திய மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT