Last Updated : 31 Dec, 2019 07:21 PM

 

Published : 31 Dec 2019 07:21 PM
Last Updated : 31 Dec 2019 07:21 PM

ரயில்வே பாதுகாப்புப் படையின் பெயர் மாற்றம்

ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆர்பிஎப்) பெயரை, ரயில்வே பாதுகாப்புப் படை சேவை (ஆர்பிஎப்எஸ்) என்று ரயில்வே அமைச்சகம் மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது

கடந்த ஜூலை மாதம் மத்திய அமைச்சரவை ரயில்வே பாதுகாப்புப் படைக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குழு என்ற அடிப்படையில் ஏ அந்தஸ்து வழங்கியது. இதன் மூலம் மற்ற அரசு ஊழியர்களைப் போலவே, ரயில்வே பாதுகாப்புப் படையினரும் நிதிச் சலுகைகளை அனுபவிக்க முடியும்.

இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், " ரயில்வே பாதுகாப்புப் படைக்கு (ஆர்பிஎப்) ஒழுங்கமைக்கப்பட்ட குழு ஏ அந்தஸ்தை, நீதிமன்ற உத்தரவுக்குப் பின் மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது.

இதையடுத்து, ஆர்பிஎப் அதாவது ரயில்வே பாதுகாப்புப் படை இனி ரயில்வே பாதுகாப்புப் படை சேவை (ஆர்பிஎப்எஸ்) என்று அழைக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிக்கையை ரயில்வே வாரியத்தின் இணை இயக்குநர் அமிதாப் ஜோஷி நேற்று வெளியிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x