Published : 31 Dec 2019 07:50 AM
Last Updated : 31 Dec 2019 07:50 AM

முப்படையின் முதல் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம்: 3 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார்

புதுடெல்லி

நாட்டின் முப்படை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப் பட்டுள்ளார். ராணுவ தளபதி பதவியில் இருந்து இன்று ஓய்வு பெறும் இவர், புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

நம் நாட்டில் இப்போது ராணு வம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு தனித்தனியாக தளபதிகள் உள்ளனர். இந்நிலை யில், கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த கார்கில் போரில் நமது ராணுவம் வெற்றி பெற்றது. எனினும், இந்தப் போரின்போது முப்படைகளை ஒருங்கிணைப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் எழுந்தன.

இதுகுறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு, வளர்ந்த நாடுகளில் இருப்பது போல முப்படைக்கும் தளபதி (Chief of Defence Staff CDS) பதவியை உருவாக்க வேண்டும் என பரிந் துரை வழங்கியது. எனினும், இந்தப் பரிந்துரையை மத்திய ஆட்சி யாளர்கள் கிடப்பில் போட்டுவிட் டனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரை யில் புதிதாக முப்படை தளபதி பதவி உருவாக்கப்படும் என அறிவித்தார்.

அமைச்சரவை ஒப்புதல்

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவ காரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் கடந்த டிசம்பர் 24 ம் தேதி நடைபெற்றது. இதில் புதிதாக முப்படை தளபதி பதவியை உரு வாக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து, முப்படை தளபதிக் கான அதிகாரங்கள் மற்றும் கடமை களை அரசு வெளியிட்டது. முப்படை தளபதி பதவியில் 4 நட்சத்திர அந்தஸ்து கொண்ட அதிகாரி நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது.

முப்படை தளபதி 65 வயது வரை பணியாற்றும் வகையில் முப் படைக்கான விதிகளில் அரசு திருத்தம் செய்தது.

தற்போது மூன்று படைகளின் தளபதிகளும், நியமனம் செய்யப்பட்டது முதல் 3 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை (இது எது முதலில் வருகிறதோ அதுவரை) பணியில் நீடிப்பர். முப்படைகளின் தளபதிகளும் சம அதிகாரம் கொண்டவர்களாக இருப்பர். இவர்களுக்கு தளபதி யாக முப்படைத் தளபதி செயல்படு வார். படைகளின் செயல்பாடு தொடர்பான அதிகாரங்கள் அந்தந்த படைத் தளபதிகளிடமே தொடர்ந்து இருக்கும்.

இந்நிலையில், முப்படை தளபதியாக ராணுவ தளபதி பிபின் ராவத் நேற்று நியமிக்கப் பட்டார். இதன்மூலம் நாட்டின் முதல் முப்படை தளபதி என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

இன்று பொறுப்பேற்பு

ராணுவத் தளபதி பதவியில் இருந்து இன்று ஓய்வுபெறவுள்ள நிலையில், பிபின் ராவத் புதிய பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். முப்படை தளபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொள்ளும் இவர், அடுத்த 3 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார்.

ராணுவம் தொடர்பான விஷயங் களில் அரசுக்கு ஒரேமுனை ஆலோ சகராக பிபின் ராவத் செயல்படுவார். ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படையை சிறந்த முறையில் ஒருங்கிணைப்பதில் இவர் கவனம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x