Published : 30 Dec 2019 09:10 PM
Last Updated : 30 Dec 2019 09:10 PM
டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரதமரின் இல்லத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் 9 தீ அணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
லுட்யென்ஸில் இருக்கும் பிரதமர் இல்லத்தின் மின்சார யூனிட் ஒன்றில் தீப்பிடித்தது. அதன் பிறகு 9 தீயணைப்பு வண்டிகள் தீயணைப்புப் பணிக்காகச் சென்றன
இது தொடர்பாக டெல்லி தீயணைப்புத் துறை கூறிய போது மாலை மணி 7.20க்கு தீ விபத்து ஏற்பட்டது, யுபிஎஸ் பேட்டரியில் தீயேற்பட்டது, 9 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.
ஆனால் அவை உள்ளே நுழைய அனுமதி கிடைக்கவில்லை. லோக் கல்யாண் மார்கை வண்டிகள் வந்தடைந்தவுடனேயே தீயணைந்து விட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் இல்ல வளாகத்தில் இருக்கும் பாதுகாப்பு ஊழியரே நெருப்பை அணைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலக டிவீட்டில், “9, லோக் கல்யாண் மார்கில் சிறு தீவிபத்து ஏற்பட்டது, ஷார்ட் சர்க்யூட்டினால் இந்த தீ ஏற்பட்டது. இது பிரதமர் இல்லப் பகுதியிலோ அல்லது அலுவலகப் பகுதியிலோ ஏற்படவில்லை. ஆனால் எல்.கே.எம்.வளாகத்தின் எஸ்பிஜி வரவேற்பறையில் ஏற்பட்டது. தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT