Published : 30 Dec 2019 04:58 PM
Last Updated : 30 Dec 2019 04:58 PM
உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் குற்றங்கள் பெருகுவதற்கு போலீஸாரின் எதிர்மறை அணுகுமுறையே காரணம் என்று பாஜக எம்.பி. கவுஷல் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2 நாட்களில் மீன் வியாபாரி ஒருவரும் ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதையடுத்து கவுஷல் கிஷோர் போலீஸாரைச் சாடியுள்ளார்.
மஹன்லால்கஞ்ச் தொகுதி எம்பி யான கவுஷல் கிஷோர் தன் ட்வீட்டில், “போலீஸாரின் எதிர்மறை அணுகுமுறையினால் லக்னோவில் குற்றங்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நடந்து வருகின்றன. கொலை, கொள்ளை தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன” என்று சாடியுள்ளார்.
மேலும் பிடிஐ செய்தி ஏஜென்சிக்கு அவர் கூறும்போது, “போலீஸார் மிரட்டிப் பணம் வசூல் செய்வதையே தொழிலாகக் கொண்டிருந்தால் போலீஸ் மீதான பயமே போய்விடும். பொதுமக்கள் பிரதிநிதிகளின் பேச்சை அவர்கள் கேட்பதில்லை, இந்த அணுகுமுறை மாநில அரசுக்கே கெட்டப் பெயரை ஏற்படுத்தி வருகிறது” என்று சாடினார்.
இவர் உ.பி.போலீஸை விமர்சிப்பது இது முதல் முறையல்ல.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT