Last Updated : 29 Dec, 2019 12:59 PM

 

Published : 29 Dec 2019 12:59 PM
Last Updated : 29 Dec 2019 12:59 PM

முத்தலாக்கினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.6000 நிவாரணம்: யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்

லக்னோ

முத்தலாக்கில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்க உள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கணவர்களால் மூன்று தலாக் வழங்கப்பட்ட பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ .6,000 ஓய்வூதியம் வழங்குவதாக நேற்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இந்த உத்தரவு வரும் ஜனவரி 2020 அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உபி முதல்வரின் முத்தலாக் ஓய்வூதிய அறிவிப்புக்கு முஸ்லிம் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ஷியா மதத் தலைவர் மவுலானா சைஃப் அப்பாஸ் கூறுகையில், இந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். எனினும் குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் வீட்டுவசதி பிரச்சினை குறித்து அரசாங்கம் அதிகம் கவனிக்க வேண்டும், இது மூன்று தலாக் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ .500 ஓய்வூதியமாக வழங்குவதை விட சிறந்தது என்றார்.

சன்னி மதகுரு மவுலானா சுஃபியானா கூறுகையில், ''இந்த பிரச்சினையில் அரசியல் செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு ரூ .500 ஓய்வூதியமாக வழங்குவதன் மூலம் அரசாங்கம் என்ன நீதி செய்ய விரும்புகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.

அகில இந்திய முஸ்லீம் பெண்களின் தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் ஷாஹிஸ்டா அம்பர், ''அரசாங்கம் மேற்கொண்ட இந்த முன்முயற்சி நல்லது, ஆனால் இந்த ஓய்வூதியத் தொகையின் அளவு மிகக் குறைவு ஆகும். அறிவிக்கப்பட்டுள்ள ரூ .6,000 வருடாந்திர ஓய்வூதியத்தைக்கொண்டு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது கடினம்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x