Published : 28 Dec 2019 02:18 PM
Last Updated : 28 Dec 2019 02:18 PM

என்ன செய்தார் எம்.பி.? - மக்களவையில் அதிக கேள்விகள் கேட்ட எம்.பி.க்கள் யார்?

17-வது மக்களவையை பொறுத்தவரையில் இதுவரை நடைபெற்றுள்ள 2 கூட்டத்தொடரில் தமிழகத்தில் இருந்த தேர்வாகியுள்ள 39 எம்.பிக்களில் அதிகமான கேள்விகள் எழுப்பி எம்.பி.க்கள் விவரம் வெளியாகியுள்ளது.

இதில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் 79 கேள்விகள் எழுப்பி முதலாமிடத்தில் உள்ளார்.

காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்.பி. ஜி. செல்வம் 75 கேள்விகள் எழுப்பி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

நாமக்கல் தொகுதி திமுக எம்.பி. சின்ராஜ் 66 கேள்விகளை எழுப்பி 3-ம் இடத்தில் உள்ளார்.

திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் 65 கேள்விகளை கேட்டு 4-ம் இடத்தில் இருக்கிறார்.

தென்காசி தொகுதி திமுக எம்.பி. தனுஷ் குமார் 61 கேள்விகளை எழுப்பி 5-வது இடத்தில் இருக்கிறார்.

மக்களவை எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து தொகுத்துள்ள பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷனும், ப்ரீசென்ஸ் மாத மின் இதழும் தமிழக எம்.பி.க்கள் மக்களவையில் எழுப்பிய கேள்விகள் எண்ணிக்கை தொடர்பான இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. பிஆர்எஸ் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அடிபடையில் இந்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x