Published : 25 Dec 2019 05:04 PM
Last Updated : 25 Dec 2019 05:04 PM

லக்னோவில் பிரமாண்ட வாஜ்பாய் சிலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

லக்னோ

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் திருவுருவச் சிலையை பிரதமர் மோடி லக்னோவில் இன்று திறந்து வைத்தார்.

பாஜகவின் முதுபெரும் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் முதுமை, உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு காலமானார். கவிஞர், பத்திரிகையாளர், அபாரமான பேச்சாளர், செயல்திறன் மிக்க அரசியலாளர், எல்லோரையும் அரவணைத்த ஆட்சியாளர், மக்கள் தலைவர் என பன்முகத் தன்மை கொண்ட அவரது பிறந்தநாள் இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது.

வாஜ்பாய் உத்தர பிரதேச மாநிலம் லக்னோ தொகுதியின் எம்.பி.யாக நீண்டகாலம் பதவி வகித்ததார். இதையடுத்து அவருக்கு அங்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படுகிறது. சிலை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்தசிலையை பிரதமர் மோடி இன்று லக்னோவில் திறந்து வைத்தார்.

உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x